மஞ்சள் ஒளிப்பரவலில்
சிதறிக் கிடந்த சித்திரத்தை
யார் வரைந்து போட்டார்களென்று தெரியவில்லை
விடியும் வரை அப்படியே
கிடந்தது
அதிகாலை பனியின்
குளிரில் நடுங்கியபடி
போர்த்திக் கொண்டிருந்த
சித்திரம்
மஞ்சள் ஒளிப்பரவலில்
சிதறிக் கிடந்ததல்ல
ஒளி அலைபாய்ந்தோடும்
வீதிகளெங்கும்
முகமற்ற
சித்திரங்கள்
ஓடி மறைகின்றன
சிலது வாகனத்தின் பின்னே
துரத்துகின்றன
காகமாக
கழுகாக
நாகமாக
நாயாக
பேயாக
வாகனச் சக்கரத்தில்
வரிசையாக நசுக்கி
மாற்றி மாற்றி
சித்திரங்களிலும்
கடந்து போகிறேன்
அடி வானில்
அப்பிக் கிடந்த
ஆயிரத்து ஒன்றாவது
சித்திரத்தில்
கொம்பு வைக்க
குளத்து நீரில் கல்லெறிந்த போது
கொம்பு முளைத்துக் கொண்டது
ஆந்தையும்
வவ்வாலும்
கூட்டாய் வரைந்த
சித்திரத்தில்
சூரியன்
இருளாய் இருக்கிறது
No comments:
Post a Comment