Wednesday 29 November 2023

"திரைகளில்லை"மொய்தீன் கவிதைகள்

காண்டா மிருகத்தைப்
போன்ற யானையை 
ப்ப்பூ என ஊதித் தள்ளிய மிச்ச இரவை காற்றிலேறி கடந்து பயணித்ததில் ஏழு கடல் பின்னே போயிருந்தது.

ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தைப் போன்ற கொம்புடையவன் 
தானே சுயமாக அறுத்து வீசிய துவண்ட கொம்பில் துருவேறிக் கொண்டிருக்கிறது.

இங்கும் அங்குமாய் 
வெட்டி விளையாடுகிறான்  சங்காரன்.
இவனையும்,அவனையும் கட்டங்களில் நாய்களாக்கி உருட்டுகிறான்.
சங்காரனின் உருட்டு எண்களுக்கொப்ப
குரைக்கின்ற நாய்கள்
கட்டங்களிலிருந்து வெளிக் குதித்து
மிச்ச இரவுகளில் 
பிச்சிப் பிறாண்டி 
குரைத்துக் கொண்டே கிடக்கிறது .

ப்ப்பூ என ஊதிய 
காண்டா மிருகத்தைப் போன்ற யானை
தலையில் விழும் பயத்தில் 
வானம்பாத்தானாய் நகரத் துவங்கிய
பேட்டரி பொம்மைகளை நாய் துரத்துகின்றன.

பொம்மைகள் கதற
நாய்கள் குரைக்க
துருவேறிய கொம்பு முளைக்க
ஏழு கடல் தாண்டிப் பறந்திருந்த தேவதையை நோக்கித் தாக்கோலை தொலைத்திருந்த பொம்மை ஒன்று கத்தியது.

"இந்தக் கடலைப் புரட்டிப் போடு"
அப்போது தேவதைக்கும் பொம்மைக்கும் இடையே திரைகளில்லை.

நவம்பர் 2017

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...