Friday 21 July 2023

மீரானின் படைப்புலகம் - ஹாமீம் முஸ்தஃபா

நாளை 23/7/23 கோவையில் நடைபெறும் எனது படைப்புலகம் குறித்த உரையாடல் நிகழ்வுக்கு முன்னோட்டமாக நண்பர் ஹாமீம் முஸ்தஃபா எழுதியுள்ள முகநூல் பதிவு.


மீரான் மைதீன் நாவல்கள் குறித்த உரையாடல் கோவையில் நாளை நடைபெறுகிறது. 

தொண்ணூறுகளின் கடைசியில்  புனைவு எழுத்துக்குள் மீரானின் பயணம் தொடங்குகிறது. இதே கால கட்டத்தில்தான் அவருக்கும் கலை இலக்கியப் பெருமன்றத்திற்குமான தோழமையும் ஆரம்பமாகிறது.

களியலில் நடைபெற்ற பேராசியர் நா.வா நினைவு முகாமில்தான் தமிழுக் குள் அவரைக் கொண்டுசேர்த்த கவர்னர் பெத்தா சிறுகதையை வாசித்தார். மன்ற அரங்கில் அவர் பகிர்ந்து கொண்ட முதல் சிறுகதை அது. 

மீரான் எழுத்துக்குள் அவரின் இருபது களில் வந்தாலும் சிறுவயது தொட்டே மேடை நாடகத்தோடு தொடர்புடைய வராக இருந்தார். அவரின் தந்தை நினைவில் வாழும் அலி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் நன்கு அறிமுகமான நாடகக் கலைஞராகவும் , நாடகம் எழுதக்கூடிய வராகவும் இருந் தார். தந்தையின் விரல்பிடித்து நடிக்கத் தொடங்கிய பருவத்திலிருந்தே மீரானிடம் அந்த ஆர்வம் இயல்பாக வந்து சேர்ந்துவிட்டது. 

இன்று மீரான் திரைத்துறைக்குள் பிரவேசிக்கத் தொடங்கிவிட்டார். நிறைய வேலை செய்து கொண்டிருக் கிறார். இந்த பரபரப்புக்கு இடையிலும் யாரா வது உள்ளூர் நாடகக்கலைஞர்கள் நாடகத்தில் மேடை ஏறவேண்டும் என்று அழைத்தால் மறுக்காமல் சென்று அவர் களுள் ஒருவராகி விடுவார் . இந்த அனுபவங்கள் மீரானுக்குள் இருக்கும் உலகின் பரப்பளவை பரத்திப்போட் டுள்ளது. 

மீரானின்  அகவுலகுக்குள்   சொந்த நம்பிக்கைகளுக்கும் , சொந்த பண்பாட்டுக்கும்  எவ்வளவு இடம் இருக் கிறதோ அதே அளவு இடத்தை தன் னோடு பழகக்கூடியவர்களின் நம்பிக் கைகளுக்கும் பண்பாட்டுக்கும் இருக்கிறது . இதுமிகவும் அபூர்வமான ஒன்று. தமிழ் படைப்பாளர் களிடம் அதிகம் காணமுடியாத ஒன்று .அதுதான் மீரானின் பலம்  

இந்த மனிதர்கள் இல்லாமல் மீரானின் நாவல்கள் முழுமை பெறுவதில்லை. தான் அல்லாத மற்றமைகளை மீரான் தன் எழுத்துக்களில் எதிர்மறையாக சித்தரிப்பதில்லை.  

பெயர்கள், அவர்களின் நம்பிக்கைகள், பழக்கவழக் கங்கள் வேறாக இருக்க லாம்.ஆனால் அவர்கள் அனைவரும் மனிதர்கள் இந்த உலகின் மகிழ்ச்சியும், அன்பும், நட்பும் , சோகமும், தோழமையும்  துயரமும், துரோகமும் எல்லோருக் குமானது. இவற்றோடு மனிதர்கள் வாழ்கிறார்கள், பயணப்படுகிறார்கள் . இது மீரானின் எழுத்துக்கள் வழியாக நமக்குக் கிடைக்கும் சித்திரம். இந்த மக்கள்  எல்லோரையும் இணைத்துக் கொண்ட, நேசிக்கின்ற  முழுமைதான் மீரானின் எழுத்து. 

கவர்னர் பெத்தா சிறுகதைத்தொகுப்பு வழியாக ஆரம்பித்த இந்தப் பயணத் தில் ரோசம்மா பீவி, சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம், பலாமரம் நிற்கும் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான்  என்னும்  சிறுகதை நூற்கள், 

ஓதி எறியப்படாத முட்டைகள், அஜ்னபி, ஒச்சை, ஒரு காதல் கதை, கலுங்கு பட்டாளம்,  திருவாழி  என்னும் நாவல் கள், மஜ்னூன் என்னும் குறுநாவல் என்று மீரானின்  படைப்புகள் வரிசைப்படுகின்றன. 

வளைகுடா நாடுகளை தங்களின் பொருள்தேடும் களமாகக் கொண்ட முஸ்லிம்களின் வலியை தமிழில் மீரானின் அளவுக்கு யாரும் இன்னும் துல்லியம் செய்யவில்லை. எதார்த்த எழுத்து முறைதான் மீரானின் தொடர்ச்சி. எதார்த்தத்தை அதன் முழு அழகோடும் அவரால் கொடுக்க முடிகிறது . அதன்காரணமாகவே அவரின் எழுத்துக்கள் நம்மோடு நெருக்கம் கொள்கின்றன . 

மீரானின் ஓதி எறியப்படாத முட்டைகள், அஜ்னபி , திருவாழி நாவல்கள் குறித்த உரையாடல் அரங்கினை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கோவை மாவட்டக்குழு நாளை ஒருங்கிணைப்பு செய்கிறது . சமீபகாலமாக படைப் பிலக்கியத்தின் மீது தன்னுடைய கவனத்தை கோவை பெருமன்றத் தோழர்கள் குவித்துவருவது மகிழ்ச் சியும், நம்பிக்கையும் தருகிறது. 

தோழர்களுக்கும் மீரானுக்கும் வாழ்த்தும் அன்பும். நிகழ்வு சிறக்கட்டும் நன்றி முஸ்தபா

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...