Friday, 31 January 2025

யூசுபுக்கு அழகூட்டிய நேசம்


எம்.மீரான் மைதீன்

எனக்கு ஆணிலும் பெண்ணிலும் வயது முதிர்ந்த வயது குறைவான என கொஞ்சம் ஆசான்கள் உண்டு.நானே அடையாளம் கண்டு அமைத்துக் கொண்ட ஆசான்கள்.அப்படியான ஆசான்களின் அந்தஸ்தில் நான் நேசிக்ககூடிய ஆசான் மதிப்புக்குரிய முஸ்தபா காஸிமி அவர்கள்.இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்னர் என்னை அடையாளம் காட்டிய கவர்னர்பெத்தா சிறுகதையை இவர்தான் மறைச்சுடர் இதழின் மூலமாகப் பதிப்பித்திருந்தார்.ஆங்கிலம் உருது அரபி என அந்த கதையின் பரப்பு விரிவடைந்துப் போயிருந்தாலும் அதனை வெளியுலகுக்கு முதலில் அறிமுகப்படுத்தியது முஸ்தபா காஸிமி அவர்கள்தான்.

நாம் நம்முடைய பார்வையோடு சிந்தனைகளோடு தொடர்புடைய மனிதர்களைத்தான் இசைவாகக் கொள்கிறோம்.சூஃபிய பார்வையும் ஆழமான கருத்துப் பகிர்வும் பெரிய மனமும் வாய்க்கப்பெற்ற இந்த மார்க்க அறிஞர் நிறைந்த அன்பாளர்.

பங்காளி பிள்ளை என்கிற புனைப்பெயரோடு முஸ்தபா காஸிமி அவர்களின் "யூசுபுக்கு அழகூட்டிய நேசம்" கவிதை நூலை இக்றா பதிப்பகம் வெளிக் கொண்டு வந்திருக்கிறது.கவிதைகளை விடுங்கள் கவிதையைப் பற்றிக்கூட சாவகாசமாகப் பேசலாம்.முதலில் கவிதை தொகுப்பை நூலாக கொண்டு வந்திருக்கிற இந்த முனைப்புக்காக ஆசானை பாராட்ட வேண்டும்.அவர் கவிதையிலிருந்தே ஒரு வார்த்தையை எடுத்தாளுவதாக இருந்தால் நயவஞ்சகத்தின் சுள்ளிகள் நேசத்தின் ஜூவாலையில் சாம்பலாகின்றன.இது காஸிமியின் நேசம்.

முஸ்தபா காஸிமி தன் இணையர் அனிஸ் ஃபாத்திமாவுக்கு இந்த கவிதை நூலை அன்பின் வெளிப்பாடாக்கி இருக்கிறார்.சிலபல கவிதைகள் பெண் குரலாய் பிரதிபலிக்கிறது.பெண்களுக்கு எதிரான ஒடுக்கும் குரலை கனவு என்கிறார்./"என் விலா எலும்பின்
படைப்புதான் நீ என்றேன்.உன் எலும்பில்லா பசியின் உணவு நான் என்றாய்.ஞானமாமேதை பீரப்பா இறையை உணவானவனே என்கிறார்.பெண் குரலை வெல்ல அனுமதிக்கும் ஆண் குரலாக கவிதைகள் மொழிபடுகிறது.இவைகள் இஸ்லாம் சமூக சூழலில் சற்றுப் பெரும் குரல்கள்.மார்க்க அறிஞரான காஸிமியிடம் இருந்து இது சில உபாயங்களைக் கொண்ட திறப்பாகத் தெரிகிறது.நாம் ஏதேனும் கூடுதலாகச் சொல்லி அவருக்கு கடினங்களை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதிலும் எண்ணம் ஊடாடுகிறது./அலைவுறும் வாலின் முந்தானையால் நீ உரசிச் செல்வதென் கவனம் ஈர்க்கத் தானே.

பெண்மை ,இறைமை,இயற்கை,பிரார்த்தனை,நேசமென கவிதைகள் வெளிச்சப் பிரவாகத்தை நோக்கி நகர்கிறது.வெளிச்சம் என்பது ஔி.இஸ்லாம் இறை ஔியாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது.

அன்பான வாழ்த்துகள் ஆசானே....


/ உன்னைப்பற்றிய
என் சொற்களை
மௌனமாகக்
கடந்து செல்வதில்
மிளிர்கிறதுன் அழகு

தாயென்றிருந்தாய்
காலடியில் தவமென்றேன்
சகோதரி என்றிருந்தாய்
கண்ணிமை நானென்றேன்
சிநேகிதி நீயென்றாய்
விழிப்பரப்பில் வேடிக்கை செய்தேன்

மனையறம் நீயானாய்
நாளொரு கூத்தில்
நாளைக் கடத்தினேன்

மகளென்று
தோற்றம் கொண்டாய்
தாய் மீண்டும்
பிறந்தாய் என்றேன்

பேத்திக்காக நிலாச்சொற்களை
கோர்வை செய்கிறேன்

சொற்களின் வசீகரம்
உன்னில் எதையும்
மாற்றி விடவில்லை

இறைமையின் பாத்திரங்களாய்
தகவமைக்கிறாய்

இன்மையின் தவத்தை
இயற்கையாக்கிக் கொண்டிருக்கிறாய்..

வளர்பிறை

மீரான் மைதீன் பயணத்திலேயே எழுத்தாளர் ஜமீலா ராசிக்கின் "அது ஓரு பிறைக்காலம்" வாசித்தேன்.நினைவுகளை மீட்டித்தரும் அனுபவப்...